/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி எஸ்.பி., எஸ்.ஐ., ஏட்டுவிற்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிப்பு
/
புதுச்சேரி எஸ்.பி., எஸ்.ஐ., ஏட்டுவிற்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிப்பு
புதுச்சேரி எஸ்.பி., எஸ்.ஐ., ஏட்டுவிற்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிப்பு
புதுச்சேரி எஸ்.பி., எஸ்.ஐ., ஏட்டுவிற்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிப்பு
ADDED : ஜன 26, 2025 05:15 AM
புதுச்சேரி : புதுச்சேரி போலீஸ் எஸ்.பி., சப்இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டுவிற்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நடக்கும் ஒவ்வொரு குடியரசு தின விழாவின் போதும், போலீசாரின் சேவையை பாராட்டி சிறந்த போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்படும்.
குடியரசு தலைவரின் சிறந்த சேவை என்ற பதக்கம் பெற்ற போலீஸ்காரர், 4 ஆண்டு கழித்த பிறகே மிக சிறப்பான சேவைக்கான (டிஸ்டிங்குஷ் சர்வீஸ்) பதக்கம் பெற முடியும். அதன்படி, ஏற்கனவே சிறப்பான சேவை பதக்கம் பெற்ற வயர்லெஸ் எஸ்.பி., பாஸ்கரனுக்கு, மிக சிறப்பான சேவைக்கான குடியரசு தலைவர் பதக்கமும், சிக்மா செக்யூரிட்டி சப்இன்ஸ்பெக்டர் ஆனந்த், போலீஸ் பயிற்சி பள்ளி தலைமை காவலர் கோபதி ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மாநில அரசு சார்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு, வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, பயிற்சி பள்ளி இன்ஸ்பெக்டர் பங்கஜ்ஷா, சப்இன்ஸ்பெக்டர்கள் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அகல்யா, மோட்டார் யூனிட் அலிக்ஸ் கலரி, ஆயுதப்படை சந்திரசேகரன், சிறப்பு நிலை உதவி சப்இன்ஸ்பெக்டர்கள் முதலியார் பேட்டை ஜெயபிரகாஷ், கிழக்கு போக்குவரத்து ரகுநாதன், பயிற்சி பள்ளி கண்ணன், நாதமணி, தலைமை காவலர்கள் சி.பி.சி.ஐ.டி., பழனிராஜா, சைபர் கிரைம் மணிமொழி, தலைமையகம் சிறப்பு நிலை உதவி சப்இன்ஸ்பெக்டர் பிரேமா, தலைமை காவலர் சி.சி.டி.என்.எஸ்., மணிகண்டன் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.