sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி சிறையில் கைதிகள் கோஷ்டி மோதல்

/

புதுச்சேரி சிறையில் கைதிகள் கோஷ்டி மோதல்

புதுச்சேரி சிறையில் கைதிகள் கோஷ்டி மோதல்

புதுச்சேரி சிறையில் கைதிகள் கோஷ்டி மோதல்


ADDED : டிச 31, 2024 04:37 AM

Google News

ADDED : டிச 31, 2024 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் இரு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் 250க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இதில், வில்லியனுார் பா.ஜ., பிரமுகர் செந்தில்குமார் கொலை வழக்கில் கைதான வில்லியனுார் நித்தியானந்தம் தரப்பினருக்கும், திருபுவனை வேலழகன் கொலை வழக்கில் கைதான ஜனா தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, இரு குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் சிறை வளாகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சிறை காவலர்கள் அவர்களை தடுக்க முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்து, சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், காலாப்பட்டு போலீசில் நித்தியானந்தம், ஜனா தரப்பினர் மீது புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் 13 பேர் மீது சிறை விதிகளை மீறி செயல்பட்டதாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us