sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

50 அடி உயர டவரில் இருந்து குதித்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

/

50 அடி உயர டவரில் இருந்து குதித்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

50 அடி உயர டவரில் இருந்து குதித்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

50 அடி உயர டவரில் இருந்து குதித்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


ADDED : ஏப் 13, 2025 03:48 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 03:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம் : கோட்டக்குப்பம் அருகே கடன் தொல்லையால், 50 அடி உயர மொபைல் போன் டவரில் இருந்து குதித்து, தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த சின்ன முதலியார்சாவடியில் தனியார் ஓட்டல் அருகே 50 அடி உயரமுள்ள தனியார் மொபைல் போன் டவரில் இருந்து, நேற்று காலை ஒருவர் குதித்தார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு கனகசெட்டிகுளம் பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இறந்தவர், புதுச்சேரி மாநிலம், வாணரப்பேட்டை ஜெயராமன் செட்டியார் தோட்டத்தைச் சேர்ந்த கோபால் மகன் ஸ்ரீதர், 41; என்பது தெரிந்தது.

இவருக்கு திருமணமாகி கலைவாணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். சில ஆண்டுகளாக நாய் உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் ஆர்வம் கொண்ட ஸ்ரீதர், கால்நடை விற்பதை தொழிலாகவும் செய்துள்ளார். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டு, கடன் பிரச்னை அதிகரித்துள்ளது. இதனால் அந்த தொழிலை கைவிட்டு, தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த அவர் சில நாட்களாக குடும்பத்தாரிடம் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார்.

நேற்று கோட்டக்குப்பம் பகுதியில் சுற்றி திரிந்த ஸ்ரீதர், திடீரென மொபைல் போன் டவரில் ஏறி, கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து, கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us