ADDED : செப் 28, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மகனை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
சிதம்பரம் வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் 44, இவர் வில்லியனுார் திருக்காமீஸ்வரர் நகரில் வாடகை வீட்டில் தங்கி, பத்துக்கண்ணு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 24ம் தேதி காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் ஜோதி கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.