ADDED : அக் 28, 2024 04:48 AM
புதுச்சேரி, : தனியார் கம்பெனி ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
புதுச்சேரி கரசூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜகணேஷ் 31, தனியார் கம்பெனி ஊழியர். இவர் அப்பளம் கம்பெனி ஆரம்பிக்க உறவினர் உள்ளிட்ட பல இடங்களில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதில் ரூ. 2.50 லட்சம் மெஷின் வாங்க கோயம்புத்துாரில் அட்வான்ஸ் கொடுத்திருந்தார். இதுதொடர்பாக கடந்த 24ம் தேதி காலை கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ராஜகணேஷ், அவரது பைக்கில் இருந்து பெட்ரோல் ஊற்றி அவர் மீது ஊற்றி தீவைத்து கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு ஜிப்பமர் மருத்துவமைனயில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி விஜயா கொடுத்த புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.