ADDED : ஜன 20, 2024 05:59 AM

அ நிறம் | அளவு
வில்லியனுார் : பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு மோகித் கன்ஸ்ட்ரக் ஷன் சார்பில், பரிசுகள் வழங்கிப்பட்டன.
வில்லியனுார், தில்லை நகர் பார்க்கில் நடந்த தில்லை நகர், வீரவாஞ்சி நகர், மேட்டுத் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவில் மோகித் கன்ஸ்ட்ரக் ஷன் நிர்வாக மேலாளர் ரவிக்குமார் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் தேவராசு, மோகித் நிர்வாகி பாலகிருஷ்ணன், அன்பு, கங்காதரன், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
