தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பணிக் கொடை ஊதியத்தை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

பணிக் கொடை ஊதியத்தை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

பணிக் கொடை ஊதியத்தை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 16, 2025 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2025 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : விற்பனைக்குழு பணி ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம் சார்பில், பணிக் கொடை மற்றும் பணி ஓய்வு ஊதியத்தை வழங்க கோரி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தட்டாஞ்சாவடி விற்பனைக்குழு செயலர் அலுவலகம் முன்பு நேற்று மாலை 4:00 மணியளவில், நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் ராமன், துணை தலைவர் ரகுநாதன், பொருளாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விற்பனைக் குழுவில் பணிபுரிந்து ஓய்வு பெற்று 9 ஆண்டுகள் ஆகியும், 24 ஊழியர்களுக்கு பணிக் கொடை மற்றும் பணி ஓய்வு ஊதியத்தை வட்டியுடன் வழங்காத விற்பனைக்குழுவின் செயலரை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us