
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஓய்வூதியர் சங்கங்களின் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்திகண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி ஓய்வூதியர் சங்கங்களின் சார்பில், சுதேசிமில் அருகில் நேற்று காலை 10:00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓய்வூதியர் சங்க கூட்டு மேடை தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் கண்டன உரை நிகழ்த்தினார். ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எட்டாவது ஊதிய குழு வரம்பு குறிப்பில் ஓய்வூதியர்கள் நலன்கள் குறிப்பிடாதது குறித்தும், வரம்பு குறிப்பை திரும்ப பெறுவதோடு, அதை முறைபடுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.

