ADDED : ஆக 19, 2026 11:44 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மத்திய அரசு கொண்டு வந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு மேடை, புதுச்சேரி கிளை சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சுதேசி மில் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய, மாநில அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பணி கொடை வழங்க வேண்டும். 2026-ம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கும் ஓய்வூதிய மாற்றத்தை உறுதி செய்ய வேண்டும். 50 சதவீத அகவிலைப்படியை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
