/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளிக்கு 'லேப்டாப்' வழங்கல்
/
அரசு பள்ளிக்கு 'லேப்டாப்' வழங்கல்
ADDED : நவ 27, 2024 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முதலியார்பேட்டை அபயம் தொண்டு நிறுவனம் சார்பில் உழந்தை கீரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளிமாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் விதமாக இலவச கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிறுவனர் சுந்தரமுருகன், தனியார்அறக்கட்டளை தலைவர் மாரியப்பன், தமிழ்ச் சங்க துணைத் தலைவர் திருநாவுக்கரசு, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் இலவச கணிணியை பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திராவிடம் வழங்கினார்.இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

