/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளிக்கு ஒலி பெருக்கி வழங்கல்
/
அரசு பள்ளிக்கு ஒலி பெருக்கி வழங்கல்
ADDED : ஜன 11, 2025 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தானாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சார்பில், பள்ளிக்கு ஒலிபெருக்கி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் பிரேமானந்தன் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் திருநாராயணன் வரவேற்றார். விழாவில், இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் திருவேங்கடம், புவியரசன், எழிலரசி, ஆறுமுகம், தாமோதரன் மற்றும் பலர் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான ஒலிபெருக்கி (சவுண்ட் சிஸ்டம்) வழங்கினர்.
நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வர், தலைமையாசிரியர், விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

