/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
/
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
ADDED : அக் 01, 2024 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இலவச சைக்கிள், ரெயின் கோட் வழங்கும் விழா நடந்தது.
பள்ளியின் தலைமை ஆசிரியை கவிதா வரவேற்றார்.
முதன்மை கல்வி அதிகாரி மோகன் தலைமை தாங்கி, 34 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் ரெயின் கோட் வழங்கினார். ஆசிரியர் ஜான்போஸ்கோ தொகுத்து வழங்கினார்.
இதில், பா.ஜ., பிரமுகர்கள் சிவக்குமார், ஜெயக்குமார், மஞ்ஜினி, சுரேஷ், சிதம்பரநாதன் உள்ளிட்ட பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.