ADDED : ஜன 10, 2024 10:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூர் அரசு நடுநிலைப்பள்ளியில், பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.
பாகூர் அரசு நடுநிலைப்பள்ளியில், சமக்ரா சிக்ஷா வழிகாட்டுதலின் படி, மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் பழனிசாமி, பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கண்ணாடிகளை வழங்கினார்.
ஏற்பாடுகளை, சமூக அறிவியல் ஆசிரியர் துரைசாமி, உடற்கல்வி ஆசிரியர் வசந்தராஜா, ஆசிரியர்கள் பிரபாவதி, சத்தியவதி, செல்வக்குமரன், தம்பி ராஜலட்சுமி, ரம்யா, மஞ்சு, சங்கீதா ஆகியோர் செய்திருந்தனர்.
ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

