ADDED : பிப் 09, 2024 11:40 PM

அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம் : கரையாம்புத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் பிரேம்குமார் ஜூலியன் வரவேற்றார்.
துணை சபாநாயகர் ராஜவேலு, பிளஸ் 1 மாணவர்கள் 11 பேருக்கும், பிளஸ் 2 மாணவர்கள் 44 பேருக்கும் லேப்டாப் வழங்கி, பேசினார். கரையாம்புத்துார் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் கருத்துரை வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள், கலந்து கொண்டனர்.
தலைமையாசிரியை ஜான்சி நன்றி கூறினார்.
