ADDED : பிப் 16, 2024 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட, இந்திராகாந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.முதல்வர் ரங்கசாமி இலவச லேப்டாப்பை மாணவர்களுக்கு வழங்கினார். பள்ளியில் பயிலும் மொத்தம் 127 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், அரசு கொறடா ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர், ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.