/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்
/
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்
ADDED : பிப் 17, 2024 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் வசந்தி வரவேற்றார்.
பட்டதாரி ஆசிரியர் சந்தானகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் ராஜவேலு பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் அருளப்பன் நன்றி கூறினார்.