ADDED : பிப் 05, 2024 03:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகளுக்கு சத்துணவு தொகுப்பு வழங்கல் நிகழ்ச்சி நடந்தது.
மாநில காசோநாய் அதிகாரி வெங்கடேஷ் தலைமை தாங்கினார். டாக்டர்கள் முகந்தி, அய்யம்மாள், சிவசங்கரி, பல் மருத்துவர் ஹெலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காசநோய் மாநில ஆலோசகர் வெங்கடகிருஷ்னா, காசநோய் பார்வையாளர் இப்ராகிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிராமப்புற செவிலியர் நந்தினி, செல்வமணி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
முன்னாள் பா.ஜ., ஓ.பி.சி., அணி மாவட்டத் தலைவர் வெங்கடேசன், தமிழ்மணி ஆகியோர் காசநோயாளிகளுக்கு சத்துணவு தொகுப்புகளை வழங்கினர். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

