ADDED : ஜூலை 26, 2025 08:13 AM

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில், இலவச சீருடையை, சபாநாயகர் செல்வம் மாணவர்களுக்கு வழங்கினார்.
பள்ளிக் கல்வித்துறை மூலம், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் நுார்முகமது வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர் சபாநாயகர் செல்வம் மாணவர்களுக்கு சீருடை, நாட்குறிப்பு கையேடு, தண்ணீர் குடிக்கும் டம்ளர் உள்ளிட்ட பொருட்களை வழங்கி, சிறப்புரைநிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில், கண்காணிப்பாளர் பவானி, சங்கநிதி, ஆசிரியை பத்மாவதி, தொகுதி தலைவர் லட்சுமிகாந்தின், பா.ஜ., பிரமுகர்கள், ஞானசேகர், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் நமச்சிவாயம் நன்றி கூறினார்.