ADDED : அக் 28, 2025 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ஏர்போர்ட் பின்புறம் உள்ள ஜிப்ஸி பகுதி மக்களுக்கு மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, முதல்வர் கீதா தலைமை தாங்கினர்.
இதில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அரிசி, பால், பிஸ்கெட் மற்றும் அத்தியாவசிய வீட்டு பொருட்களை சேகரித்து, அவற்றை தேவையான குடும்பங்களுக்கு வழங்கினர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வளர்மதி செய்திருந்தனர்.

