/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்
/
பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்
பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்
பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்
ADDED : மார் 16, 2024 11:12 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம் நாளை துவங்குகிறது.
பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் அலுவலக செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம் நாளை 18ம் தேதி துவக்கி 21ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது.மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை தபால் நிலையம், திருக்கனுார், மதகடிப்பட்டு, கோட்டக்குப்பம் இந்தியன் வங்கி, மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி, வில்லியனுார், ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் மற்றும் எஸ்.பி.ஐ., தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முகாமில், ரூ.269 மதிப்புள்ள சிம் கார்டு ரூ. 50 மட்டுமே. இதில், முதல் 45 நாட்களுக்கு அனைத்து நெட்வொர்க்களிலும் இலவசமாக பேசலாம். தினசரி 2 ஜி.பி., டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ்., இலவசம்.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய தற்போதைய எண்ணை மாற்றாமல் அதிவேக எப்.டி.டி.எச்., தொழில்நுட்பத்திற்கு தங்கள் லேண்ட் லைன் எண்ணை இலவசமாக மாற்றி கொள்ளலாம். அதற்கான மோடம் இலவசம். புதிய எப்.டி.டி.எச்., இணைப்பு ரூ. 329 முதல் மற்றும் கிராமப்புறங்களில் ஆறு மாதங்களுக்கு ரூ.999க்கு கிடைக்கும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

