தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனநல ஆலோசகர் போக்சோவில் கைது

மனநல ஆலோசகர் போக்சோவில் கைது

மனநல ஆலோசகர் போக்சோவில் கைது


ADDED : செப் 21, 2024 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2024 12:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாகப்பட்டினம்: நாகையில், சமூக நலத்துறையின் கீழ் அன்னை சத்யா அரசு ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பெற்றோரை இழந்த 10 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் உட்பட 55 சிறுமிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் வெளி நபர்கள் அணுகுமுறை குறித்து ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர் சத்யபிரகாஷ்,42; ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் குழந்தைகள் நல குழுவிடம், 5 மாணவியர், சத்ய பிரகாஷ் தங்களிடம் பாலியல் ரீதியாக பேசுவதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து காப்பக கண்காணிப்பாளர் சசிகலா அளித்த புகாரின் பேரில், நாகை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, சத்யபிரகாஷை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us