/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுசாரம் மாரியம்மன் கோவில் ஆடி உற்சவம் நாளை துவக்கம்
/
புதுசாரம் மாரியம்மன் கோவில் ஆடி உற்சவம் நாளை துவக்கம்
புதுசாரம் மாரியம்மன் கோவில் ஆடி உற்சவம் நாளை துவக்கம்
புதுசாரம் மாரியம்மன் கோவில் ஆடி உற்சவம் நாளை துவக்கம்
ADDED : ஜூலை 29, 2025 07:27 AM
புதுச்சேரி : புதுச்சேரி, புதுசாரத்தில் கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், 46ம் ஆண்டு ஆடி உற்சவம் நாளை (30ம் தேதி) மாலை 6:00 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்குகிறது. இரவு 7:00 மணிக்கு காப்புக் கட்டுதல், 31ம் தேதி மாலை 5:00 மணிக்கு ஊரணிப் பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது.
வரும் 1ம் தேதி காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், 7:00 மணிக்கு கரகம் வீதியுலா புறப்பாடு, மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல், இரவு 7:00 மணிக்கு கும்பம் படையல் நடக்கிறது.
2ம் தேதி காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம், இரவு 7:00 மணிக்கு மின் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 3ம் தேதி காலை 8:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.ஏற்பாடு களை கோவில் அர்ச்சகர்கள் அய்யப்பன், செந்தில்குமார் மற்றும் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.