sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி - பிரெஞ்சு இடையே கலாசார பரிமாற்றம் அவசியம் முதல்வர் ரங்கசாமி பேச்சு

/

புதுச்சேரி - பிரெஞ்சு இடையே கலாசார பரிமாற்றம் அவசியம் முதல்வர் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி - பிரெஞ்சு இடையே கலாசார பரிமாற்றம் அவசியம் முதல்வர் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி - பிரெஞ்சு இடையே கலாசார பரிமாற்றம் அவசியம் முதல்வர் ரங்கசாமி பேச்சு


ADDED : பிப் 15, 2025 05:06 AM

Google News

ADDED : பிப் 15, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில், இந்திய-பிரெஞ்சு திருவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நேற்று துவங்கியது.

விழாவில், முதல்வர் ரங்கசாமி பங்கேற்று பேசியதாவது:

புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறையானது சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. புதுச்சேரி மாநிலம், சுற்றுலாவில் உலக அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. புதுச்சேரியின் அழகு ரசிக்க வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது.

புதுச்சேரிக்கும் - பிரான்ஸ் நாட்டிற்கும் பழமையான தொடர்பு உள்ளது. புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இந்த தொடர்பை மேம்படுத்த வேண்டும். இருநாட்டிற்கும் இடையே உள்ள கலை கலாசார பரிமாற்றம் மிகவும் அவசியம்.

புதுச்சேரியில் பிரெஞ்சு கலை, கலாசாரம் பின்பற்றப்படுவது போல் பிரான்ஸ் நாட்டிலும் இந்திய கலாசாரம் பின்பற்றப்பட்டு வருகிறது. சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்திய-பிரெஞ்சு திருவிழா நல்ல வழிகாட்டியாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us