புதுச்சேரி கலை விழா-2026 : முதல்வர் துவக்கி வைப்பு
புதுச்சேரி கலை விழா-2026 : முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 17, 2026 04:22 AM

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் கலை விழாவினை முதல்வர் ரங்கசாமி முரசு கொட்டி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் புதுச்சேரி கலை விழா--2026 தொடக்க விழா கடற்கரை காந்தி திடலில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, விழாவை முரசு கொட்டி துவக்கி வைத்தார்.
இதில் புதுச்சேரி, அசாம், உத்தரகாண்ட், அரியானா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், குஜராத், தெலுங்கானா, கேரளம், கர்நாடகா, ரீயூனியன் தீவு ஆகிய மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் கலந்துகொண்டு தங்களது மாநிலங்களில் பராம்பரிய கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.
இந்த கலை விழா மாலை 6:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை புதுச்சேரி கடற்கரை காந்தி திடல் மட்டுமின்றி, கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம், மடுகரை மந்தைவெளி திடல், உறுவையாறு அரசு கலையரங்கம், திருக்கனூர் மாரியம்மன் கோவில் திடல் என 5 இடங்களில் வரை நடக்கின்றன.
விழாவில் அமைச்சர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், விக்னேஷ், அரசு செயலாளர் முகமது அசன் அபித், இயக்குனர் சக்திவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கலை விழாவை கடற்கரைக்கு வந்திருந்த உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
