/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேச ஒற்றுமை அமைதி ஊர்வலம் புதுச்சேரி கலைஞர்கள் பங்கேற்பு
/
தேச ஒற்றுமை அமைதி ஊர்வலம் புதுச்சேரி கலைஞர்கள் பங்கேற்பு
தேச ஒற்றுமை அமைதி ஊர்வலம் புதுச்சேரி கலைஞர்கள் பங்கேற்பு
தேச ஒற்றுமை அமைதி ஊர்வலம் புதுச்சேரி கலைஞர்கள் பங்கேற்பு
ADDED : மார் 16, 2026 04:42 AM

புதுச்சேரி: தலாய்லாமாவின் 90வது பிறந்தநாள் விழாவையொட்டி நடந்த, தேச ஒற்றுமை வலியுறுத்தும் அமைதி ஊர்வலத்தில் புதுச்சேரி கலைஞர்கள் பங்கேற்றனர்.
உலக அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரும், புத்த மத தலைவருமான தலாய்லாமாவின் 90 வது பிறந்த நாள் இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் கொண்டாடப்பட்டது. விழாவில், 32 நாடுகள் பங்கேற்ற சர்வதேச அளவிலான அமைதி முகாம் நடந்தது.
இதில் இந்திய திபெத் நட்புறவுக் கழகத்தின் மாநில தலைவரும், சமூக சேவகருமான ஆதவன் ஒருங்கிணைப்பில், முன்னாள் கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் தலைமையில், புதுச்சேரியை சேர்ந்த கலைஞர்கள் கலைமாமணி முருகன், மதிவதனி, கலையரசி, சாகித்யா, ஹரி பிரபா ஜோதிலட்சுமி, சந்தியா, இந்திய திபெத் நட்புறவு கழகத்தின் புதுச்சேரி மாநில தலைவி ஜெயப்பிரதா உள்ளிட்ட கலைஞர்கள் தலாய்லாமாவின் முன்னிலையில் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் கலந்து கொண்டனர்.

