sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி கலை விழா துவக்கம்

/

புதுச்சேரி கலை விழா துவக்கம்

புதுச்சேரி கலை விழா துவக்கம்

புதுச்சேரி கலை விழா துவக்கம்


ADDED : ஆக 16, 2025 03:12 AM

Google News

ADDED : ஆக 16, 2025 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:புதுச்சேரி கலை விழாவினை கவர்னர், முதல்வர் ஆகியோர் முரசு கொட்டி துவக்கி வைத்தனர்.

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறையும், தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து புதுச்சேரி கலைவிழா - 2025 தொடக்க நிகழ்ச்சி கடற்கரை காந்தி திடலில் நேற்று நடந்தது.

விழாவினை, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் முரசு கொட்டி துவக்கி வைத்தனர்.

விழாவில் கலை பண்பாட்டு துறை செயலாளர் முகம்மது அசன் அபித், இயக்குனர் முரளிதரன், தஞ்சை தென்னக பண்பாட்டுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த கலைவிழா புதுச்சேரி கடற்கரை, முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் திடல், நெட்டபாக்கம் சிவன் கோவில் திடல், பரிக்கல்பட்டு அரசு தொடக்கப்பள்ளி அருகிலும், காட்டேரிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் திடல் என, 5 இடங்களில் நடக்கிறது. இந்த கலைவிழா நாளை வரை 3 நாட்கள் தினமும் மாலை 6:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை நடக்கிறது.

இதில் புதுச்சேரி, தெலுங்கானா, ஒடிசா, கேரளா என, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான 1,200-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று தங்கள் மாநிலங்களில் சேர்ந்த கலாசார நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

ஏற்பாடுகளை கலை, பண்பாட்டுத்துறை அதிகாரிகள் கஸ்தூரி ரங்கன், அருள்ராஜ், முகமது கலிபா, ஷியாம் சுந்தம் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us