ADDED : ஜூலை 26, 2011 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ்., திட்ட அறிமுக விழா நடந்தது.விழாவில், மாணவர் சரவணன் தலைமை தாங்கினார்.
பள்ளி முதல்வர் மொகிந்தர்பால் வாழ்த்தினார். திட்ட அலுவலர் சேகர் நாட்டு நலப்பணித்திட்டம் குறித்தும், அதன் அடையாளம், கொள்கை, வரலாறு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு கூறினார்.விழாவில் 11ம் வகுப்பு மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.மாணவி ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.