sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் வளமான டிஜிட்டல் எதிர்காலம்; சபாநாயகர் செல்வம் நம்பிக்கை

/

புதுச்சேரியில் வளமான டிஜிட்டல் எதிர்காலம்; சபாநாயகர் செல்வம் நம்பிக்கை

புதுச்சேரியில் வளமான டிஜிட்டல் எதிர்காலம்; சபாநாயகர் செல்வம் நம்பிக்கை

புதுச்சேரியில் வளமான டிஜிட்டல் எதிர்காலம்; சபாநாயகர் செல்வம் நம்பிக்கை


ADDED : ஜன 31, 2025 07:43 AM

Google News

ADDED : ஜன 31, 2025 07:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; தேசிய இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் சார்பில், இணைய பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடந்தது.

மத்திய அமைச்சர் முருகன் தலைமை தாங்கினார். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைமை ஒருங்கிணைப்பாளர் புத்த சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கில் பங்கேற்ற சபாநாயகர் செல்வம் பேசியதாவது:

தேசிய அளவில் இணைய சட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதுச்சேரி அரசும் பல்வேறு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது.

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை, இணைய பாதுகாப்பை மையமாக கொண்ட புதிய விரிவான பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. அச்சுறுத்தல்களை சமாளிக்க அதி நவீன கருவிகள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்ற பரந்த இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரியில் பாதுகாப்பான டிஜிட்டல் எதிர்காலத்தை உறுதிப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்.

சைபர் கிரைமை எதிர்த்து போராடுவதில், தொடர்ச்சியான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். கூட்டு முயற்சி, நிலையான விழிப்புணர்வு, வலுவான சட்ட கட்டமைப்பு மூலம், சைபர் கிரைமால் ஏற்படும் அபாயங்களை குறைத்து, புதுச்சேரியில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us