/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 தேர்வு; 14,086 மாணவ, மாணவியர்கள் பங்கேற்பு
/
புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 தேர்வு; 14,086 மாணவ, மாணவியர்கள் பங்கேற்பு
புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 தேர்வு; 14,086 மாணவ, மாணவியர்கள் பங்கேற்பு
புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 தேர்வு; 14,086 மாணவ, மாணவியர்கள் பங்கேற்பு
ADDED : மார் 02, 2024 06:17 AM

புதுச்சேரி : புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 14 ஆயிரம் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று, எழுதினர்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது.
புதுச்சேரி பகுதியில், 31 மையங்களில் நடந்த தேர்வில், 44 அரசு மற்றும் 86 தனியார் பள்ளிகளை சேர்ந்த, 11 ஆயிரத்து, 856 பள்ளி மாணவர்கள், 230 தனித்தேர்வர்கள், பங்கேற்றனர்.
காரைக்காலில், 9 மையங்களில் நடந்த தேர்வில், 11 அரசு மற்றும் 17 தனியார் பள்ளிகளை சேர்ந்த, 2 ஆயிரத்து 152 பள்ளி மாணவர்களும், 41 தனித்தேர்வர்களும் கலந்து கொண்டனர். இந்த தேர்வில், மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆர்வத்துடன் ஆசிரியர்களின் உதவியுடன் தேர்வெழுதினர்.
முன்னதாக, காலையில் மாணவ - மாணவியர், கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு சென்று பிரார்த்தனை முடித்து விட்டு, தேர்வு மையங்களுக்கு வந்தனர்.
தேர்வு மையங்களுக்கு, மாணவர்கள் மொபைல் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுக்கூட அனுமதி சீட்டு இல்லாத மாணவர்கள், தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தேர்வு அறை மற்றும் மையத்தில், ஒழுங்கீன செயலில் ஈடுபடும் தேர்வர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் புரியும் குற்றத்திற்கு ஏற்ப தண்டனைகள் அளிக்கப்படும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது. இந்த தேர்வு வரும், 22ம் தேதி வரை தொடர்ந்து நடக்க உள்ளது.

