sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலி பங்குச்சந்தையில் முதலீடு செய்து ரூ.12.23 லட்சம் ஏமாந்த புதுச்சேரி நபர்

/

போலி பங்குச்சந்தையில் முதலீடு செய்து ரூ.12.23 லட்சம் ஏமாந்த புதுச்சேரி நபர்

போலி பங்குச்சந்தையில் முதலீடு செய்து ரூ.12.23 லட்சம் ஏமாந்த புதுச்சேரி நபர்

போலி பங்குச்சந்தையில் முதலீடு செய்து ரூ.12.23 லட்சம் ஏமாந்த புதுச்சேரி நபர்


ADDED : ஜூன் 13, 2025 03:32 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: போலி பங்குச்சந்தையில் முதலீடு செய்து புதுச்சேரி நபர் ரூ.12.23 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.

கருவடிக்குப்பத்தை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபத்துடன் பணம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய அவர் மர்ம நபர் தெரிவித்த பங்குச்சந்தையில் 12 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தார்.

அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, போலி பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.

இதேபோல், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த நபர் ஒரு லட்சம், பிள்ளைத்தோட்டத்தை சேர்ந்த நபர் 55 ஆயிரம், தட்டாஞ்சாவடியை சேர்ந்த நபர் ஆயிரத்து 500, புதுச்சேரி பெண் ஆயிரத்து 200 என, மொத்தம் 5 பேர் 13 லட்சத்து 80 ஆயிரத்து 700 ரூபாய் இழந்துள்ளனர்.

இதுகுறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us