sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கிடப்பில் போடப்பட்ட ரயில்வே திட்டம் அவலம் : செயல் வடிவம் பெற நடவடிக்கை தேவை

/

கிடப்பில் போடப்பட்ட ரயில்வே திட்டம் அவலம் : செயல் வடிவம் பெற நடவடிக்கை தேவை

கிடப்பில் போடப்பட்ட ரயில்வே திட்டம் அவலம் : செயல் வடிவம் பெற நடவடிக்கை தேவை

கிடப்பில் போடப்பட்ட ரயில்வே திட்டம் அவலம் : செயல் வடிவம் பெற நடவடிக்கை தேவை


ADDED : ஜூலை 27, 2011 11:41 PM

Google News

ADDED : ஜூலை 27, 2011 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த திண்டிவனம் - புதுச்சேரி - கடலூர் ரயில்வே திட்டம் சர்வே பணியோடு முடங்கி கிடக்கிறது.

புதுச்சேரியிலிருந்து வெளியூர்களுக்குச் செல்ல பஸ்சை விட்டால் வேறு வழியில்லை. இதனால், புதுச்சேரியில் இருந்து புறப்படும் அனைத்து பஸ்களிலும் எள் விழுந்தால் எண்ணையாகிவிடும் அளவிற்குக் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக, திண்டிவனம் வழித் தடத்திலும், கடலூர் வழித் தடத்திலும் நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கினாலும், கூட்டம் குறைந்தபாடில்லை. பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பஸ்களில் தொங்கி கொண்டு பயணிக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. இந்த வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், தொலைநோக்கு பார்வையோடு திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூருக்கு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது.



திண்டிவனம் - புதுச்சேரி - கடலூர் ரயில்வே திட்டத்தைச் செயல்படுத்த, 77 கிலோ மீட்டர் தூரத்திற்கு சர்வேயும் எடுக்கப்பட்டது. பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்கள் வழியாகவும், விளைநிலங்கள் பாதிக்காத வகையிலும் ரயில் பாதை அமைக்க திட்டம் தீட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், நிலம் கையகப்படுத்த இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. சர்வே பணியுடன், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த ரயில்வே திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்தத் திட்டம் செயல்வடிவம் பெற்று இருந்தால், புதுச்சேரி, திண்டிவனம், கடலூர் ஆகிய நகரங்களின் போக்குவரத்து பிரச்னைக்குத் தீர்வு கிடைத்திருக்கும். புதுச்சேரிக்கு விழுப்புரத்தில் இருந்து மட்டுமே ரயில் பாதை இணைப்பு உள்ளது. எனவே, எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் விழுப்புரம் சென்று அருங்கிருந்தே ரயிலில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.



திண்டிவனம் - புதுச்சேரி - கடலூர் ரயில்வே திட்டத்தைச் செயல்படுத்தி இருந்தால், கடலூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், மற்ற ஊர்களுக்கும் இணைப்பு கிடைத்திருக்கும். மேலும், வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் நின்று செல்லும் முக்கிய நிறுத்தமாக புதுச்சேரி ரயில் நிலையம் உருவெடுத்து இருக்கும். இது, புதுச்சேரியின் சுற்றுலா வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்திருக்கும் என்பது நிச்சயம். இந்தத் திட்டம் செயல்வடிவம் பெற்றிருந்தால், திண்டிவனம், கடலூர் சாலைகளில் விபத்துகளின் எண்ணிக்கையும், நெரிசலும் பெருமளவில் குறைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



புதுச்சேரி மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கக் கூடிய இந்த ரயில்வே திட்டத்தைச் செயல்படுத்த புதுச்சேரி அரசும் அக்கறை காட்டவில்லை. எம்.பி.,யாக இருந்தவர்களும் ஆர்வம் காண்பிக்கவில்லை. சென்னையில் இருந்து மகாபலிபுரம் வழியாக கடலூருக்குப் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு 525 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி தருமாறு பிரதமரிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை வைத்துள்ளார். கிடப்பில் போடப்பட்டுள்ள திண்டிவனம் - புதுச்சேரி - கடலூர் ரயில்வே திட்டத்துக்கும் உயிர் கொடுக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.










      Dinamalar
      Follow us