sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாடை போராட்டம்: மா.கம்யூ., திட்டம்

/

பாடை போராட்டம்: மா.கம்யூ., திட்டம்

பாடை போராட்டம்: மா.கம்யூ., திட்டம்

பாடை போராட்டம்: மா.கம்யூ., திட்டம்


ADDED : ஆக 03, 2011 01:32 AM

Google News

ADDED : ஆக 03, 2011 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்கால் அரசு மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்து மாத்திரைகள் மற்றும் டாக்டர்கள் பற்றாக்குறையை கண்டித்து வரும் 5ம் தேதி மா.கம்யூ., வினர் பாடை கட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

காரைக்கால் மா.கம்யூ., வட்டக்குழு கூட்டம் நடந்தது. ராமர் தலைமை தாங்கினார். செயலர் வின்சென்ட், நிர்வாகிகள் கலியபெருமாள், ராஜசேகரன், ரவி, திவ்வியநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற வேண்டும். சி.டி., ஸ்கேன் பழுதாகி உள்ளது. சிறுநீரகம், நரம்பியல், மயக்கவியல், இருதயப் பிரிவிற்கு டாக்டர்கள் இல்லை. உயிர்காக்கும் மருந்து, மாத்திரைகள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மருத்துவமனையில் இருந்து மருந்து மாத்திரைகள் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவதை கண்டித்து 5ம் தேதி பாடை கட்டி போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.








      Dinamalar
      Follow us