sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சமையல் பணியில் ஆசிரியர்கள்: தடை செய்ய ஆசிரியர் சங்கம் மனு

/

சமையல் பணியில் ஆசிரியர்கள்: தடை செய்ய ஆசிரியர் சங்கம் மனு

சமையல் பணியில் ஆசிரியர்கள்: தடை செய்ய ஆசிரியர் சங்கம் மனு

சமையல் பணியில் ஆசிரியர்கள்: தடை செய்ய ஆசிரியர் சங்கம் மனு


ADDED : ஆக 25, 2011 01:58 AM

Google News

ADDED : ஆக 25, 2011 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சமையல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதைத் தடை செய்ய, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

ஆசிரியர் சங்கம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள சூழலில் கற்பித்தல் பணி செம்மையாக நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இருக்கும் ஆசிரியர்களை, மதிய உணவு தயாரிப்புப் பணியில் ஈடுபடுத்துவது முறையல்ல.

மேலும், கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத் தொடரின் கல்வி மானியக் கோரிக்கையின் 24வது அறிவிப்பாக இதே கருத்து அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரையில் இந்த அறிவிப்பு நடைமுறைப் படுத்தப்படவில்லை. உணவு தயாரிக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களின் கற்பிக்கும் ஆற்றல் வீணாகிறது. எனவே இப்பணியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்துவதை முதல்வர் தடை செய்ய வேண்டும். அவர்களை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து பள்ளிகளில் நியமனம் செய்ய வேண்டும். சமையல் பணிக்கு தகுந்த இளைஞர்களை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us