sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரோட்டரி சங்கம் சார்பில் புத்தக வங்கி துவக்கம்

/

ரோட்டரி சங்கம் சார்பில் புத்தக வங்கி துவக்கம்

ரோட்டரி சங்கம் சார்பில் புத்தக வங்கி துவக்கம்

ரோட்டரி சங்கம் சார்பில் புத்தக வங்கி துவக்கம்


ADDED : செப் 09, 2011 12:16 AM

Google News

ADDED : செப் 09, 2011 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி ரோட்டரி சங்கம் சார்பில் புத்தக வங்கி துவக்க விழா வெங்கட்டா நகர் தமிழ்ச் சங்கத்தில் நடந்தது.

ரோட்டரி சேர்மன் மணி, இலக்கியப் பிரிவு சேர்மன் முத்துராமன் அய்யப்பன் சிறப்புரையாற்றினர். ரோட்டரி தலைவர் ராஜ்குமார் பேசுகையில், மாணவர்கள், அலுவலக ஊழியர்கள், இல்லதரசிகள் உள்ளிட்டோர் தாங்கள் பயன்படுத்தி, தற்போது உபயோகப்படாமல் உள்ள புத்தகங்களை ரோட்டரி புத்தக வங்கிக்குக் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டார். பல்வேறு தரப்பினர் உபயோகப்படுத்திய நூல்களைப் பெற்று, தேவையானவர்களுக்கு, குறிப்பாக மாணவர்கள், முதியோர், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு வழங்கிடும் வகையில், ரோட்டரி புத்தக வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உபயோகப்படுத்திய நூல்களை, வெங்கட்டா நகரில் உள்ள தமிழ்ச் சங்கத்திலும், புரொபஷனல் கொரியர் அலுவலகங்களிலும் கொடுக்கலாம். ஏற்பாடுகளை ரோட்டரி செயலாளர் ஸ்ரீகாந்த், திட்டத் தலைவர் சிவராம் ஆல்வா, சமுதாயப் பணி இயக்குனர் பாலமுருகன் ஆகியோர் செய்தனர். ரோட்டரி ரவி, பராங்குசம், சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










      Dinamalar
      Follow us