/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கலெக்டர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்
/
கலெக்டர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்
ADDED : செப் 09, 2011 12:16 AM
புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதி இடை தேர்தலையொட்டி அனைத்துக்கட்சி கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான தீபக்குமார் பேசுகையில் 'இடைதேர்தலின்போது தேர்தல் ஆணையம் வகுத்துள்ள நன்னடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டும். விதிமீறிலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என குறிப்பிட்டார். அனைத்துக் கட்சி கூட்டத்தில் இடைத் தேர்தல் அட்டவணை, மாதிரி நடத்தை விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கூட்டத்தில் என்.ஆர். காங்., சார்பில் ஜெயபால், பாஸ்கர், காங்., கட்சி பொதுச் செயலாளர் விநாயகமூர்த்தி, செயலாளர் மனோகர், அ.தி.மு.க., நகர செயலாளர் ரவீந்திரன், இணைச் செயலாளர் காசிநாதன், தி.மு.க., சந்திரேஷ்குமார், பா.ஜ., முன்னாள் தலைவர் விஸ்வேஸ்வரன், இந்திய கம்யூ., செயலாளர் நாரா கலைநாதன், மா கம்யூ., ராஜாங்கம், தேசியவாத காங்., தலைவர் சுந்தரமூர்த்தி, பகுஜன் கட்சி சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.