/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி தெற்கு, காரைக்கால் அணிகள் மாஸ்டர்ஸ் கிரிக்கெட்டில் வெற்றி
/
புதுச்சேரி தெற்கு, காரைக்கால் அணிகள் மாஸ்டர்ஸ் கிரிக்கெட்டில் வெற்றி
புதுச்சேரி தெற்கு, காரைக்கால் அணிகள் மாஸ்டர்ஸ் கிரிக்கெட்டில் வெற்றி
புதுச்சேரி தெற்கு, காரைக்கால் அணிகள் மாஸ்டர்ஸ் கிரிக்கெட்டில் வெற்றி
ADDED : பிப் 04, 2024 03:23 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டியில், புதுச்சேரி தெற்கு மற்றும் காரைக்கால் அணிகள் வெற்றி பெற்றன.
புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கேப் சீசெம் மைதானத்தில் நடக்கும் மாஸ்டர்ஸ் 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நேற்று காலை 9:15 மணிக்கு, புதுச்சேரி வடக்கு மற்றும் மேற்கு அணிகள் மோதின.
முதலில் மேற்கு அணி, 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 110 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய வடக்கு அணி, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து, 110 ரன்கள் எடுத்ததால், விறுவிறுப்பான போட்டி, 'டை'யில் முடிந்தது. இதில், 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த ,வடக்கு அணியின் சுரேஷ் குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
காலை, 11:45 மணிக்கு நடந்த போட்டியில், புதுச்சேரி தெற்கு மற்றும் மாகி அணிகள் களம் இறங்கின.முதலில் ஆடிய மாகி அணி, 10 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 74 ரன்கள் அடித்தது.
அடுத்து தெற்கு அணி, 7.3 ஓவர்களில், 1 விக்கெட் மட்டுமே இழந்து, 77 ரன்கள் அடித்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதில், 3 விக்கெட்டுகள் வீழ்த்திய, தெற்கு அணியின் பிரவீன் ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.
மதியம், 2:15 மணிக்கு நடந்த போட்டியில் காரைக்கால் மற்றும் ஏனாம் அணிகள் மோதின. முதலில் ஆடிய காரைக்கால் அணி, 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 121 ரன்களைகுவித்தது. தொடர்ந்து ஆடிய ஏனாம் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து, 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் காரைக்கால் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், 19 பந்துகளில், 45 ரன்கள் குவித்த, காரைக்கால் அணியை சேர்ந்த கருப்புசாமி ஆட்டநாயகன் விருது வென்றார்.