sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி மாணவர்களுக்கு அனைத்து படிப்புகளிலும் இட ஒதுக்கீடு தர வேண்டும் பல்கலை விழாவில் முதல்வர் ரங்கசாமி பேச்சு

/

புதுச்சேரி மாணவர்களுக்கு அனைத்து படிப்புகளிலும் இட ஒதுக்கீடு தர வேண்டும் பல்கலை விழாவில் முதல்வர் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி மாணவர்களுக்கு அனைத்து படிப்புகளிலும் இட ஒதுக்கீடு தர வேண்டும் பல்கலை விழாவில் முதல்வர் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி மாணவர்களுக்கு அனைத்து படிப்புகளிலும் இட ஒதுக்கீடு தர வேண்டும் பல்கலை விழாவில் முதல்வர் ரங்கசாமி பேச்சு


ADDED : ஜூன் 18, 2025 04:49 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: நாட்டின் கல்வி வளர்ச்சியில் புதுச்சேரி பல்கலைக்கழகமும் முக்கிய பங்காற்றி வருகின்றது என முதல்வர் ரங்கசாமி பேசினார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்ற விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

புதுச்சேரி பல்கலைக்கழகம் சிறந்த பல்கலைக்கழகமாக உள்ளது. இங்கு படிப்பவர்களில் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது. சில பாடப்பிரிவுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் இன்றைக்கு பல பிரிவுகளுடன் சிறந்து விளங்குகின்றது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ளூர் மாணவர்களுக்கு அதிக இடங்கள் கிடைக்க வேண்டும். அனைத்து படிப்புகளிலும் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது எண்ணமாக உள்ளது.

தற்போது குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மட்டுமே புதுச்சேரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்படுகின்றது. அனைத்து படிப்புகளிலும் இட ஒதுக்கீடுதர வேண்டும். இது சமுதாய வளர்ச்சி வழிவகுக்கும். கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அடிப்படை கல்வி மட்டும் அல்ல உயர்கல்வியும் அனைத்து குடும்பத்திற்கும் கிடைக்க வேண்டும்.

இதற்காக தான் மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி வருகின்றது.

நாட்டின் கல்வி வளர்ச்சியில் புதுச்சேரி பல்கலைக்கழகமும் முக்கிய பங்காற்றி வருகிறது. பல்கலைக்கழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.






      Dinamalar
      Follow us