ADDED : ஜன 14, 2025 06:11 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து போலீசார் சார்பில், ெஹல்மெட் அணிய வேண்டும் என பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் முதல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போக்குவரத்து போலீசார், வினாடி வினா போட்டி நடத்தி ஹெல்மெட் பரிசு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தெற்கு மற்றும் மேற்கு பகுதி போக்குவரத்து போலீசார் சார்பில், எஸ்.பி., மோகன்குமார் முன்னிலையில், தன்னார்வலர்கள் உதவியுடன், அரியாங்குப்பத்தில், நேற்று இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு வினாடி, வினா நடத்தினர்.
அதில், சரியான பதில் கூறிய நபர்களுக்கு ஹெல்மெட் பரிசு வழங்கப்பட்டது.
