ADDED : ஜன 29, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர், : பாகூர் மூலநாதர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு, தை மாத ராகுகால வழிபாடு நடந்தது.
இதையொட்டி, மூலநாதர்,வேதாம்பிகையம்மன், பாலவிநாயகர், முருகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு கோவிலில் உள்ள கால பைரவருக்கு, பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிேஷகம், உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை செய்து மகா தீபாரதனை நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். செந்நிற மலர்கள் சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.