sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பால பணி தீவிரம்: புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் போக்குவரத்து மாற்றம்

/

கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பால பணி தீவிரம்: புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் போக்குவரத்து மாற்றம்

கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பால பணி தீவிரம்: புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் போக்குவரத்து மாற்றம்

கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பால பணி தீவிரம்: புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் போக்குவரத்து மாற்றம்


ADDED : மார் 01, 2024 11:28 AM

Google News

ADDED : மார் 01, 2024 11:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : கண்டமங்கலம் ரயில்வே மேம்பால பணி காரணமாக, புதுச்சேரி- விழுப்புரம் இடையே மாற்றுப் பாதையில் போக்குவரத்து திருப்பி விடப் பட்டுள்ளது. இரு மார்க்கத்திலும் ஒருவழி பாதையாக மாற்றி, போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்புவதால் நெரிசல் இல்லாமல் செல்கின்றன.

விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே நான்குவழி சாலை அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. இதில், புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதனால் நேற்று காலை முதல் இச்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மதகடிப்பட்டில் இருந்து கலிதீர்த்தாள்குப்பம், குச்சிப்பாளையம், வாதானுார், செல்லிப்பட்டு, பத்துக்கண்ணு, வில்லியனுார் வழியாக செல்கின்றன. புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் வாகனங்கள் அரியூரில் இருந்து கீழூர், மிட்டாமண்டகப்பட்டு, பள்ளி புதுப்பட்டு, பள்ளிநேலியனுார், திருபுவனை பாளையம், திருபுவனையில் புதிய பைபாஸ் வழியாக செல்கின்றன.

இந்த இரு சாலையிலும் ஆங்காங்கே வழித்தட பெயர் பலகை வைத்து, ஒருவழி பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமமில்லாமல் செல்கின்றனர்.

மதகடிப்பட்டு வழியாக புதுச்சேரி செல்லும் சாலையில் தொழிற்சாலையில் இருந்து கனரக வாகனங்கள் எதிர் திசையில் வருவதால், சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது, பணியில் உள்ள போலீசார் சரிசெய்து வாகனங்களை அனுப்பி வைக்கின்றனர்.

ஒருவழி பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள பகுதியில் சாலைகள் விசாலமாகவும், மேடுபள்ளங்கள் இல்லாமல் தரமாக உள்ளதால் வாகனங்கள் எவ்வித சிரமமும் இன்றி செல்கின்றன.

போக்குவரத்து மாற்றத்தினால் மதகடிப்பட்டு செல்ல வேண்டிய சில தனியார் பஸ்கள் கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் வரை சென்று மீண்டும் புதுச்சேரிக்கு செல்கின்றன. இதனை போக்குவரத்து துறை கண்காணிக்க வேண்டும்.

போலீசாரின் சேவை தேவை

விழுப்புரம்- புதுச்சேரி இடையே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள சாலையில் முக்கியமான இடங்களில் வில்லியனுார் போக்குவரத்து போலீசார் மற்றும் திருபுவனை போலீசார் பணியில் ஈடுபட்டு, வாகனங்களை ஒழுங்குபடுத்தி, தடை இல்லாமல் செல்ல வழிவகை செய்தனர்.போலீசாரின் இப்பணி நாள்தோறும் தொடர்ந்தால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்ல முடியும். இப்பணியில், புதுச்சேரி போலீசாருடன் கண்டமங்கலம் போலீசாரும் கைகோர்த்து செயல்பட வேண்டும்.



மாணவர்களுக்கு சிரமம்

பள்ளிகளில் தற்போது ஆண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், கண்டமங்கலம் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் அரியூரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக, மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.



கூடுதல் கட்டணம்

போக்குவரத்து மாற்றம் காரணமாக, அரியூரில் இருந்து திருபுவனைக்கு சுமார் 13 கி.மீ., துாரமும், மதகடிப்பட்டில் இருந்தும் பத்துக்கண்ணு வழியாக வில்லியனுாருக்கு சுமார் 20 கி.மீ துாரம் வாகனங்கள் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதனால் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us