ADDED : ஜூலை 18, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதியதாக கட்டப்பட்ட ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டது.
புதுச்சேரிக்கு ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், நவீன வசதிகளுடன் கூடிய, புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷன் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்டேஷன் வளாகத்தில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் திருச்சியில் இருந்து காணொலி மூலமாக ரயில்வே போலீஸ் ஜ.ஜி., ஈஸ்வரராவ் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.