/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுாறடி சாலையில் ஜவ்வாக இழுக்கும் ரயில்வே சர்வீஸ் சாலை பணி பொதுமக்கள் கடும் அவதி
/
நுாறடி சாலையில் ஜவ்வாக இழுக்கும் ரயில்வே சர்வீஸ் சாலை பணி பொதுமக்கள் கடும் அவதி
நுாறடி சாலையில் ஜவ்வாக இழுக்கும் ரயில்வே சர்வீஸ் சாலை பணி பொதுமக்கள் கடும் அவதி
நுாறடி சாலையில் ஜவ்வாக இழுக்கும் ரயில்வே சர்வீஸ் சாலை பணி பொதுமக்கள் கடும் அவதி
ADDED : நவ 25, 2024 05:30 AM

புதுச்சேரி : புதுச்சேரி நுாறடிசாலை ரயில்வே சுரங்கப்பாதை சர்வீஸ் சாலை பணி, 17 மாதம் கடந்தும் முடியாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
புதுச்சேரி இந்திரா சிக்னலில் இருந்து கடலுார் செல்லும் நுாறடிசாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இதனால் கீழ் பகுதியில் இருந்த ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. வாகனங்களால் மேம்பாலம் வழியாக கடந்து செல்ல முடியும். ஆனால் பாதசாரிகளால் ரயில்பாதையை கடந்து செல்ல வழி இல்லை.
இதனால் மூடப்பட்ட ரயில்வே கேட் அருகே ரயில்பாதை கீழ் ரெடிமேட் கான்கீரிட் மூலம் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
ஆனால் சுரங்கபாதைக்கு வடக்கு மற்றும் தெற்கு பக்கம் சர்வீஸ் சாலை மற்றும் வடிகால் அமைக்கப்படவில்லை.
சுரங்கப்பாதையின் இருபுறத்திலும் 75 மீட்டர் நீளத்திற்கு சர்வீஸ் சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் எஸ்.ஐ.டி.பி.ஐ., வங்கியில் புதுச்சேரி அரசு ரூ. 5.38 கோடி கடன் பெற்றது.
கடன் தொகை மூலம் பொதுப்பணித்துறை சர்வீஸ் சாலை அமைக்கும் பணியை கடந்த ஆண்டு மே 10ம் தேதி துவங்கியது. 10 மாதத்தில் கட்டி முடிக்க தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
ஆனால், 17 மாதம் கடந்தும் இதுவரை சுரங்கப்பாதை சர்வீஸ் சாலை பணி முடியவில்லை. கட்டுமான பணிகளை முடித்து சுரங்கப்பாதை சர்வீஸ் சாலையை திறக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.