ADDED : பிப் 01, 2025 05:45 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி வலுவான நிலையில் உள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும், ரஞ்சி கோப்பைக்க்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரி துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில் நடந்த போட்டியில், புதுச்சேரி, உத்திராகண்ன்ட் அணிகள் மோதின.
முதல் இன்னிங்சில் புதுச்சேரி அணி 427 ரன்கள் குவித்தது. புதுச்சேரி அணியின் மோஹித் காலே அபாரமாக ஆடி இரட்டை சதம் அடித்தார்.
அவர், 202 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் உத்திரகாண்ட் அணி, 1 விக்கெட் இழந்து 77 ரன்களுடன், 350 ரன்கள், பின்தங்கி இருந்தது.
