sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரேஷன் கடை ஊழியர் மயங்கி விழுந்து சாவு

/

ரேஷன் கடை ஊழியர் மயங்கி விழுந்து சாவு

ரேஷன் கடை ஊழியர் மயங்கி விழுந்து சாவு

ரேஷன் கடை ஊழியர் மயங்கி விழுந்து சாவு


ADDED : ஜூலை 05, 2025 04:47 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர், : ரேஷன் கடை ஊழியர் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாகூர் அடுத்த நிர்ணயப்பட்டு, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அய்யனார், 40; புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறையில் ரேஷன் கடை ஊழியர். இவரது மனைவி மேரி, 34; இரண்டு மகள்கள் உள்ளனர்.

ரேஷன் கடை மூடப்பட்டதால், அய்யனாருக்கு, சரியாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், அவர் கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார்.

இதனிடையே, குடிப்பழக்கத்திற்கு ஆளான அய்யனார் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் தொடர்ந்து மது அருந்தி வந்ததால், அவரது மனைவி மேரி கோபித்து கொண்டு இரண்டு மகள்களையும் அழைத்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் மதியம் அய்யனார் வீட்டு வாசலில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து அவரது மனைவி மேரி அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us