sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பதிவாளர் அலுவலகம் முற்றுகை

/

பதிவாளர் அலுவலகம் முற்றுகை

பதிவாளர் அலுவலகம் முற்றுகை

பதிவாளர் அலுவலகம் முற்றுகை


ADDED : பிப் 12, 2025 03:37 AM

Google News

ADDED : பிப் 12, 2025 03:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பாண்டெக்ஸ் நிறுவன ஊழியர்கள், சம்பளம் வழங்க கோரி கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் இயங்கி வரும் பாண்டெக்ஸ் நிறுவனத்திற்கு, கடந்த பட்ஜெட்டில் ரூ.1 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியிலிருந்து ஊழியர்களுக்கு சேர வேண்டிய 60 மாத நிலுவை சம்பளத்தில், 5 மாத சம்பளம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி, ஊழியர்கள், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 6வது நாளாக பணிகளை புறக்கணித்து, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் கொளஞ்சியப்பன், பாரதிய மஸ்துார் சங்கம் ஆசைத்தம்பி ஆகியோர் தலைமையில், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை மனுவை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை சந்தித்து அளிக்க சென்றனர். அவர், இல்லாததால், அலுவலகத்தை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பட்ஜெட் டில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து, 5 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலம் பாண்டெக்ஸ் நிறுவனத்திற்கு வரவேண்டிய நிலுவை தொகையை வசூலித்து, ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us