தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பள்ளியில் இடிந்து விழுந்த சுவர் அகற்றம்

பள்ளியில் இடிந்து விழுந்த சுவர் அகற்றம்

பள்ளியில் இடிந்து விழுந்த சுவர் அகற்றம்


ADDED : பிப் 14, 2025 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2025 04:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: அரசு பள்ளி, குடிநீர் குழாய் சுவர் இடிந்து விழுந்து, 3 மாணவர்கள் காயமடைந்த சம்பவத்தை அடுத்து, சேதமடைந்துள்ள சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது.

தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பம் அரசு துவக்கப் பள்ளியில், குடிநீர் குழாய் சுவர் இடிந்து விழுந்தது. அங்கு விளையாடிய இரண்டு மாணவர்கள், ஒரு மாணவி படுகாயமடைந்தனர். மூன்று மாணவர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

சபாநாயகர் செல்வம், பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளியை பார்வையிட்டனர். கடந்த 1991ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடம், பள்ளி வகுப்பறைகள் மிகவும் பலவீனமாக இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளியில் எல்.கே.ஜி., முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை, அருகில் உள்ள சமூதாய நலக்கூடத்திலும், 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களை, நோணாங்குப்பம் அரசு பள்ளியில் மாற்ற சபாநாயகர் செல்வம், இயக்குனரிடம் கேட்டுக் கொண்டார்.

பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் குழாய் சுவர் அதன் அருகே சாயும் நிலையில், இருந்த முன் பக்க சுற்றுச்சுவரையும் நேற்று ஜே.சி.பி., இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us