sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை பிரிவு துவக்கம்

/

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை பிரிவு துவக்கம்

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை பிரிவு துவக்கம்

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை பிரிவு துவக்கம்


ADDED : ஏப் 09, 2025 04:15 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 04:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், சிறுநீரகவியல் வெளிப்புற சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டது.

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மேம்படுத்தப்பட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் சிறுநீரகவியல் வெளிப்புற சிகிச்சை புதிய பிரிவை, மருத்துவ கண்காணிப்பாளர் ஐயப்பன் நேற்று துவக்கி வைத்தார்.

மகளிர் சிறப்பு மருத்துவர் வல்சா டயானா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, இந்திராகாந்தி அரசு மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் சுதாகர் சிறப்புரை ஆற்றினர். மருத்துவ உள்ளிருப்பு அதிகாரி ரொசாரியோ உட்பட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வெளிப்புற சிகிச்சை பிரிவு வாரந்தோறும் செவ்வாய் கிழமையில், 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை இயங்கும். இங்கு, சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர்களிடம் பெண்கள் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சை பெறலாம்.

தொடர்ந்து மருத்துவ கருத்தரங்கு நிகழ்ச்சியில், மருத்துவமனையில், பணிபுரியும் ஊழியர்களுக்கு அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிக்கு உதவி புரிவதற்கு பயற்சி அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us