ரெப்கோ வங்கி சேமிப்பு திட்ட முகாம் 31ம் தேதி வரை நடக்கிறது
ரெப்கோ வங்கி சேமிப்பு திட்ட முகாம் 31ம் தேதி வரை நடக்கிறது
ADDED : ஜூன் 13, 2026 06:09 AM
புதுச்சேரி: புதுச்சேரி ரெப்கோ வங்கி சார்பில், சிறப்பு சேமிப்பு திட்ட முகாம் வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.
புதுச்சேரி செட்டி தெருவில் ரெப்கோ வங்கி இயங்கி வருகிறது. வங்கி சார்பில், சிறப்பு சேமிப்பு திட்ட முகாம் கடந்த 10ம் தேதி துவங்கியது. இம்முகாம் வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. முகாமில் வைப்பு தொகை (டெபாசிட்) வட்டி விகிதம் மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீதம், பொதுமக்களுக்கு 7.75 சதவீதம், மகளிருக்கு 7.85 சதவீதம் வழங்கப் படுகிறது.
ரெப்கோ பார்சூன் பிளஸ் திட்டத்தில் 50 வயதிற்கு மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர், 55 வயதிற்கு மேற்பட்டவர்கள், அரசு மற்றும் தனியார் துறையில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற அனைவருக்கும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
மேலும், வங்கியில் வியாபாரம் மற்றும் அனைத்து தேவைகளுக்கும் அடமானக்கடன் எளிய நடைமுறையில் வழங்கப்படுகிறது. தங்க நகை கடன் தினசரி வழங்கப்படுகிறது என, ரெப்கோ வங்கி தெரிவித்துள்ளது.
