/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கட்டண பாக்கியை செலுத்த வேண்டுகோள்
/
மின் கட்டண பாக்கியை செலுத்த வேண்டுகோள்
ADDED : மார் 06, 2024 03:14 AM
புதுச்சேரி : புதுச்சேரி தெற்கு மின் கோட்டம், மின் நுகர்வோர்கள் மின் கட்டன பாக்கியினை செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து மின்துறை தெற்கு செயற்பொறியாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
மின்துறை, தீவிர மின் துண்டிப்பு மேற்கொள்ள இருப்பதால், கிராமம் (தெற்கு) கோட்டம் அலுவலகத்திற்கு உட்பட்ட அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம், வடமங்கலம், திருவண்டார்கோவில், வாதானுார், கரியமாணிக்கம், கரையாம்புத்துார் ஆகிய பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் அனைவரும், தங்களுடைய நிலுவைத் தொகை மற்றும் மின் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், மின் இணைப்பு துண்டித்த பிறகு, நிலுவைத் தொகை முழுவதும் செலுத்திய பிறகே மின் இணைப்பு வழங்கப்படும் என, இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

