sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சீருடைப்படி வழங்க கோரிக்கை

/

சீருடைப்படி வழங்க கோரிக்கை

சீருடைப்படி வழங்க கோரிக்கை

சீருடைப்படி வழங்க கோரிக்கை


ADDED : ஏப் 04, 2025 04:13 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சட்டசபை காவலர்கள், தீயணைப்பு மற்றும் சிறைத்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்கள் உடனடியாக சீருடைப்படி வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் பணியாற்றும் போலீசார், சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் சட்டசபை காவலர்களுக்கு ஆண்டுதோறும் சீருடைப்படி வழங்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக சீருடைப்படி வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக, சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.,க்கள் சீருடை பணியாளர்களுக்கான சீருடைப்படி, உடனடியாக வழங்க கோரிக்கை வைத்தனர்.

இதையேற்று, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சீருடைப்படி உடனடியாக வழங்கப்படும் என தெரிவித்தார்.

அதன்படி, போலீசாருக்கு சீருடைப்படியாக ஆண்டுக்கு ரூ. 7000 வீதம் 4 ஆண்டுகளுக்கான நிலுவைத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. ஆனால், மற்ற சீருடை பணியாளர்களான சட்டசபை காவலர்கள், சிறைத்துறை, தீயணைப்பு துறையினருக்கு இதுவரையில் சீருடைப்படி வழங்கப்படவில்லை.

ஆகையால், போலீசாரை போன்று தங்களுக்கும் உடனடியாக சீருடைப்படி வழங்க வேண்டும் என சீருடை பணியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us